இந்திய ஏக இரட்சகர் சபை நடுநிலைப் பள்ளியில் இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 ஆகஸ்ட், 2026

இந்திய ஏக இரட்சகர் சபை நடுநிலைப் பள்ளியில் இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் மூக்குப்பீறி கிராம பஞ்சாயத்து பகுதியில் மூக்குப்பீறி - பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபையின் நிர்வாகம் சார்பில் 1873ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த இந்திய ஏக இரட்சகர் சபை நடுநிலைப் பள்ளியில் இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
 
பள்ளி தலைமை ஆசிரியர். பி. ராஜன் தலைமை தாங்கினார். தலைமை போதகரும் பள்ளியின் ஆசிரியருமான ஜெ. சௌந்தரராஜன் இறைவேண்டல் செய்தார். 

பள்ளியின் தாளாளர் குரு. மத்தேயு ஜெபசிங் தேசிய கொடியை ஏற்றி வைத்து பறக்கவிட்டார்.

பள்ளி ஆசிரியர்கள் 
எஸ்.ரவி, ஜெனிஸி, ஜெபஷீலா, ஜாஸ்மின், புல்மணி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

முடிவில் தேசிய கீதம் பாடி விழா இனிதே நிறைவுற்றது, வந்திருந்த அனைவருக்கும் கேக் சாக்லேட் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad