தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் இதயங்களை இணைக்கும் இனிய விழா! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜூன், 2022

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் இதயங்களை இணைக்கும் இனிய விழா!

சென்னை  போரூரில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் அனைத்து மத தலைவர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை இணைத்து ஒரே மேடையில் ஒரு உணர்ச்சி மிக்க விழா நடைபெற்றது.


தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் தோழர் K.M.அசன் ஷேக், கல்வியாளர் & தேசிய குழு உறுப்பினர் தோழர் ஜான் சேவியர் தங்கராஜ்,  மாநில நிர்வாகி மற்றும் தேசிய குழு உறுப்பினர் தோழர் கழுகு கே. ராஜேந்திரன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில ஆலோசகர், தமிழக அரசின், பாரதி விருது பெற்ற "பாவலர்  "பாரதி சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் மக்கள் நல்வாழ்வில் அக்கறை கொண்டு செயல்பட்டு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் போரூர் S.J.ஜனார்த்தனம் அவர்கள் வரவேற்புரை ஆற்ற, திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


மத நல்லிணக்க பாடல்களை திருவேற்காடு ஸ்ரீ ஆனந்த ஸ்வாமிகள், மற்றும் கிருஸ்துவ பாதுகாப்பு கழகத்தின் நிறுவனர் & தலைவர் சகோதரர் டி.எஸ்.மகிமைதாஸ் ஆகியோர் பாடினார்கள், மத  நல்லிணக்க கவிதைகளை அரிமா கவிச்சுடர் சிந்தை வாசன், கவிஞர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ஆவடி. சே.வரலட்சுமி, விவசாயி ஜெயராமன் ஆகியோர் வாசித்தனர்.


முன்னதாக பிரம்ம குமாரிகள் இறை வணக்கம் செலுத்தினர், சுதந்திர போராட்ட  வீரரும், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சுகாதார துறை அமைச்சருமான டாக்டர் H.V.ஹண்டே அவர்கள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை துவக்கி வைத்தார், சிறப்பு  அழைப்பாளர்களாக ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. நவாஸ் கனி அவர்கள், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. க.கணபதி, ம.தி.மு.க வின் மாநில துணை பொதுச் செயலாளர் தோழர் மல்லை சத்யா, கல்வியாளர், அருட் தந்தை டாக்டர் M.A. சூசை, குருமஹா சன்னிதானம் வடபாதி ஆதீனம், ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத்தின் தலைவர் தோழர் எஸ்.ஏ.என்.வசீகரன், நீதியின் குரல் முனைவர் சி.ஆர்.பாஸ்கரன், FAIRA கூட்டமைப்பின் நிறுவனர் & தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி,மூத்த பத்திரிகையாளர் புதுமடம் ஜாபர், திருநங்கைகளின் தாய் & தந்தையுமாக விளங்கும் மதர் நூரி அம்மா, வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் டாக்டர் கௌரி அசோகன், தயாரிப்பாளர் & இயக்குநர் ஜெயதேவி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் டாக்டர் அ.சபிதா, பா.ஜ.க மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ், தயாரிப்பாளர், இயக்குனர் A.R.K.ராஜ ராஜா, கவிமாமணி தாமரைபூவண்ணன், பா.ஜ.க கலை பிரிவு டாக்டர் V.K.வெங்கடேஷ், தமிழக அரசின் மாற்றுத் திறனாளர் நல வாரிய உறுப்பினர் "அன்புக் கரங்கள்" அப்துல் லத்தீப், தமிழக அரசின் நீர் நிலை மேலாண்மை தனவேல் முத்துகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டு மத நல்லிணக்கதை வலியுறுத்தினர்.


ராஜ்டிஜிட்டல் S.யுவராஜ், பொதிகை ஷாநவாஸ், பல்லாவரம் செந்தில்,கொளத்தூர் பாலாஜி, மீசை ஏழுமலை, எம்.டி.இராமலிங்கம், பல்லாவரம் ஜெயகுமார், PRO K.அருண், நவாஸ், சித்தரஞ்சன், உமா மகேஸ்வர்ராவ், சிவகுமார் ராஜ்பிரபு, தர்ம்புரி சசிகுமார், நன்பன் அபுபக்கர், குடியாத்தம் ஆனந்தராஜ், ஸ்ரீநாத், M.பரத்முனுசாமி, M.ஜேசப் சங்கீத், பல்லாவரம் ரவி, R.ஷோபன் ராஜசேகரன், போரூர் ரஞ்சன், உமா மகேஸ்வர்ராவ், ஜெயவேலு, மதி ஒளி ராஜ்குமார், மணிகண்டன், மயிலாப்பூர் பாலசுப்பிரமணியம், உட்பட பலர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.


தென் சென்னை மாவட்ட தலைவர் தோழர் A.லட்சுமணன் நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/