தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டிஎஸ் ரவீந்திரதாஸ் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூன், 2022

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டிஎஸ் ரவீந்திரதாஸ் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினம்.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ). கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ மாதேஸ்வரா நாயுடு ஹால் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பத்திரிக்கையாளரின் போராளி டிஎஸ்  ரவீந்திரதாஸ் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது


மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில பொதுச் செயலாளர் ஐயா கு.வெங்கட்ராமன், மாநில பொருளாளர் சேலம் ஏ.சேவியர், மற்றும் மாநில துணை தலைவர் திருவண்ணாமலை என்.ரவிசந்திரன், மாநில அமைப்பாளர் & தேசிய குழு உறுப்பினர் கே.ரமேஷ் குமார், மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.கே.முருகன், தர்ம்புரி மாவட்ட தலைவர் ஜெயா தொலைக்காட்சி சீனிவாசன், மண்டல தலைவர் ஜி.காதர் ஷெரீப், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் & மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம்.ஆர். கஜேந்திரன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ஜே.வெங்கடேசன் , வேலூர் மண்டல அமைப்பாளர் V.D.சிவமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மாநில பொதுகுழு உறுப்பினர், மூத்த பத்திரிகையாளர் ஆர்.ஆர்.சுப்பிரமணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கொடியை கவிஞர், எழுத்தாளர், கலைமாமணி உயர்திருமதி K.M.ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் ஏற்றி வைத்தார் . 


முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் அவர்களின் முன்னிலையில், ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்வி குழுமங்களின் தலைவர், சந்திரசேகரன் அவர்கள் மறைந்த தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களின் படத்தை திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார் . 


இந்த நிகழ்வில், பாண்டிச்சேரி பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் எம்.பி .மதி மகாராஜா, டாக்டர் அஜிதா ரவீந்திரதாஸ், "நியூஸ் தமிழ்" தோழர் G. தாமோதரன்,  மூத்த பத்திரிக்கையாளர்கள் & எழுத்தாளர்கள்  ஜவஹர் ஆறுமுகம் , பாரதி சுகுமாரன, அகில இந்திய சித்த மருத்துவ தலைவர், தேசிய குழு உறுப்பினர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டர், தொழிலதிபர் நல்லாசிரியர் ஆர் டி  அக்ரோ இன்புட் ஆர் தர்மலிங்கம்,  பாஜக மாவட்டத் தலைவர் சிவப்பிரகாசம், ஊத்தங்கரை  வர்த்தகர் சங்க செயலாளர் உமாபதி, எஸ் ஆர் எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர்  சீனிவாசன் தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளி செயலாளர் தங்கராஜ், வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் V.K.சஞ்சீவன், ஊத்தங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் தணிகை ஜி.கருணாநிதி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் பெருமாள், இந்தியன் ரெட் கிராஸ் சேர்மன்  டாக்டர் தேவராஜ்,  இந்திய மக்கள் கட்சி மாநில செயலாளர் அசோக், அரிமா சங்க தலைவர் டாக்டர் பத்மநாபன், ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் ஆர் கே ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . 


கோவை மாவடத்திலிருந்து, தேசிய குழு உறுப்பினர் எஸ்.மோகன்ராஜ், மற்றும் நிர்வாகிகளுடன் கரூர் மாவட்ட தலைவர் சம்பத் குமார், தூத்துக்குடி தேசிய குழு உறுப்பினர் கிம சங்கர், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் தீக்கதிர் கண்ணன், தேவா, திருச்சி மாவட்ட தலைவர் R.S.பாலாஜி, தென் சென்னை மாவட்டம் சார்பில் பல்லாவரம் M.ரவி, VAO திரு சந்திரன், திருப்பூர் இளங்கோ, புதுச்சேரி வழக்கறிஞர் அன்பரசு, உட்பட பல மாவட்டத்தில் இருந்து தோழர்கள் வந்து இருந்தனர் . 


அகில இந்திய தலைவர் தோழர் சோமசுந்தரம் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் நசீர்அகமது, பொருளாளர் மஞ்சுநாத், மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள், தேசிய குழு உறுப்பினர் C.S.,சசிகுமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் K.மனோகரன், கே பழனி மாவட்ட செயலாளர். எஸ் கணேஷ் மாவட்ட பொருளாளர். மணிகண்டன் மாவட்ட செய்தி தொடர்பாளர். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினர். 


நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் தோழர் E.V.பழனியப்பன் நன்றியுரை வழங்கினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/