நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தனித்திறமைகளை மெருகேற்றும் நோக்கத்தில் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழித் திட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கோடைப் பயிற்சி புதியன விரும்பு முகாமை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. கா. ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் திரு . நந்தகுமார் இ. ஆ.ப. அவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சா.ப. அம்ரித் இ.ஆ.ப. அவர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக