திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி தினம் தோறும் காலை மற்றும் இரவில் பெரிய சேஷம், சின்ன சேஷம், சிங்கம், அண்ணப்பறவை, முத்து பந்தல், சர்வ பூபாலம், மோகினி அவதாரம் , கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்ற நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக