மகளிர் தின விழா கொண்டாட்டம். 7 மகளிர் சுய உதவி குழுவினருக்கு தங்க வளையல். வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 மார்ச், 2023

மகளிர் தின விழா கொண்டாட்டம். 7 மகளிர் சுய உதவி குழுவினருக்கு தங்க வளையல். வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ வழங்கினார்.


வண்டலூர் ஊராட்சியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது, இதில் 7 மகளிர் சுய உதவி குழுவினருக்கு தங்க வளையல்களை வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ  வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் ஊராட்சியில், உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. 

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணா என்ற குணசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு துணை பெரும் தலைவர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெகன்தேவேந்திரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ, காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் வி.எஸ்.ஆராமுதன் ஆகியோர் கலந்துகொண்டு உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர். 

பின்னர் 7 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு தங்க வளையல்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதனை அடுத்து 100 துப்புரவு பணியாளர்களுக்கு புடவைகளை வழங்கினர். பின்னர் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டன. இதில் திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு குழு தலைவி வசந்தா தேவேந்திரன் நன்றி கூறி நிகழ்வினை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/