திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஏழைகளுக்கு வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 மார்ச், 2023

திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஏழைகளுக்கு வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


ஊரப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஏழைகளுக்கு வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா மற்றும் திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் நேற்று இரவு நடைபெற்றது. 


இதில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளருமௌ, ஒன்றிய குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன் தலைமை தாங்கினார். ஊரப்பாக்கம் ஊராட்சி கிளைகழக செயலாளர் மெய்யழகன், ஜான்தினகரன், தமிழ்ச்செல்வன், இன்ப சேகரன், கண்ணன், சண்முகம், சாய்ராம், புஷ்பராஜ், வரலட்சுமிமுருகன், ஜே.கே.தினேஷ், சி.ஜெ.கார்த்திக், வாசு, கமலநாதன், செல்வகுமார், சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரப்பாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். 


சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா, செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம்.டி.சண்முகம் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன், மாவட்ட தொண்டுரணி அமைப்பாளர் ஜான்தினகரன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் கருணாகரன், மகளிர் அணி அமைப்பாளர் விஜயலட்சுமி, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தீபன் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 


பின்னர் பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டிருந்த கிளை செயலாளர் சி.ஜே.கார்த்திக் ஏற்பாட்டின் பேரில் 2500 பெண்களுக்கு புடவை, பிரியாணி, சலவைத் தொழிலாளர்கள் 15 பேருக்கு அயன்பாக்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிதிவண்டி, இளைஞர்களுக்கு கேரம் போர்டு, வாலிபால், டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் கிட் ஆகிய நல திட்ட உதவிகளை வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ வழங்கினார். 


இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கிளை கழக செயலாளர்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏவிஎம் இளங்கோவன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/