செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 மார்ச், 2023

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாள் விழா.


செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி ஜிஎஸ்டி சாலையில் தமிழக முதலமைச்சர் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்களின் எழுபதாவது பிறந்தநாளை தொடர்ந்து பிறந்தநாள் விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. 

இவ்விழாவில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன் அவர்கள் முன்னிலையில் காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவருமான எம்.கே.டி. கார்த்திக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அவர்களும்,நகர் மன்ற துணைத் தலைவர் ஜி.கே லோகநாதன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பொதுமக்களுக்கு  நலத்திட்ட  உதவிகளும் வழங்கப்பட்டது. பொது மக்களின் நலனை கருதி நலனை விட உயிரே பெரியது என்று தலைக்கவசம் உயிர்க்கவசம்  என்ற முறையில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர் இளம் பெண்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இருசக்கர வாகன தலைக்கவசம் வழங்கினார். சலவைத் தொழிலாளர்களுக்கு  இஸ்திரி  இயந்திரம். வேலையற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம், ஊனமுற்றவர்களுக்கு  தள்ளுவண்டி போன்றவை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில் பேசிய நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி வளர்ச்சியில் திமுக அரசு பெரும்பங்கு வகிக்கிறது என புகழாரம் சூட்டினார். அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/