தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 ஏப்ரல், 2023

தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பாக 29-4-23 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் அப்பாஸ்தீன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் அயன்புரம் ஆர்.பாபு முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.தேவேந்திரன் சிறப்புரையாற்றினார் .

தகவல் அறியும் சட்டத்தின் அவசியம் குறித்தும்,இடித்துரைப்பாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி ஆர்டிஐ ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரியும் தகவல் வழங்காத பொது தகவல் அலுவலர்கள் மீது சட்டப்படி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியும் இன்னும் பிற கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலிருந்து சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/