இராணிப்பேட்டை மாவட்டம் மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க பல்லாக்கு ஊர்வலம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 ஏப்ரல், 2023

இராணிப்பேட்டை மாவட்டம் மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க பல்லாக்கு ஊர்வலம்.


இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, இராணிப்பேட்டை பஜார் தெருவில் உள்ள ஶ்ரீ சுமதிநாத் ஜெயின் ஆலயத்திலிருந்து மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  

மஹாவீர் ஜெயந்தி விழா முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க மஹாவீரர் சிலை மற்றும் திருஉருவ படம் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வைத்து மேளதாளங்ககுடன் நடனமாடிய படி ஜெயின் சமுதாய ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பாடல்களை பாடியபடி ஊர்வலமாக ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஊர்வலம் அந்த ஆலயத்தை அடைந்தது. 


இந்த ஊர்வலத்தில் உயிர்களை கொல்ல கூடாது மது அருந்த கூடாது என மஹாவீரரின் கொள்கைகளையும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டு மகாவீர் ஜெயந்தி விழா கொலகாலமாக நடைபெற்றது.


- வாலஜா தாலுகா செய்தியாளர் நிஹால் அஹமத். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/