இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர திமுக சார்பில் ஒரு கோடி பேர் இயக்கத்தில் இணையும் திட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஏப்ரல், 2023

இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர திமுக சார்பில் ஒரு கோடி பேர் இயக்கத்தில் இணையும் திட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் திராவிட முன்னேற்ற கழக தலைவர்  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு கொண்டாடும் விதமாக கழக பவள விழா ஆண்டு கொண்டாடும் விதமாக உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முன்னெடுப்பை கொள்கை காக்கும் கழகத்தினை மேலும் வலு சேர்த்திட 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  இராணிப்பேட்டை ஆர் காந்தி  துவக்கி வைத்தார்.

மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர்  வினோத் காந்தி  தொழிலதிபர் ஜனாப் சௌகார் முன்னாபாய்  தலைமையில் நகர மன்ற தலைவர் ST.முஹம்மது அமீன் அவர்களின் முன்னிலையில் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய 19வது வார்டு நகர மன்ற உறுப்பினரும் முபாரக் பாஷா அவர்களின் தாயாரமான ஷாபிரா பி அவர்கள் சுயேட்சையாக வெற்றி பெற்று திமுகவுக்கு ஆதரவளித்து வந்தார்.


இன்று மாவட்ட செயலாளர் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டு அவருடன் பல பெண்கள் ஆர்வத்துடன் திமுகவில் இணைத்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு ரம்ஜான் புத்தாடை வழங்கப்பட்டது இதில் நகர மன்ற துணைத் தலைவர் S குல்சார் அஹமத் நகரமைப்பு நிர்வாகிகள் KM ஹிமாயூன் S.ஜபர் அஹமத் V.பூபாலன் J.ஜமுனா ராஜேந்திரன் A அஹ்மத் பாஷா AK ஜாபர் அலி நகர மன்ற உறுப்பினர் மற்றும் கிளை செயலாளர்கள் சுலைமான் அக்பர் முகமது காதர் முசாபர் பாஷா உதயகுமார் ஆசிப் அஹமத் முபாரக் பாஷா பாபுலால் ரமேஷ் செல்வம் முஜம்மில் இலாஹி சதாம் உசேன் சிக்கன் பாருக்  முஹம்மத் அப்சல் கோடீஸ்வரன் அணிகளின் நிர்வாகிகள் ஜபியுல்லா அக்பர் பாஷா போர் முக்தார் கலிமுல்லா ஹபீப்  முதஸ்சீர் ஜாவித்  பழனி பாபு  ரஹீம் பாய் சிக்கன் அமீன் பரித் உசைன் ரஃபி அஹமத். இலியாஸ் அனைவரும் உடன் இருந்தனர்.


- வாலாஜா தாலுகா செய்தியாளர் நிகால் அஹமத் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/