ஊரப்பாக்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் ஊராட்சி அதிமுக கிளை செயலாளர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

ஊரப்பாக்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் ஊராட்சி அதிமுக கிளை செயலாளர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.


ஊரப்பாக்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் ஊராட்சி அதிமுக கிளை செயலாளர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு  செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் சா. இராசேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை கொடுத்து, நம்முடைய கழகத்தில் இந்த மாத இறுதிக்குள் இரண்டு கோடி தொண்டர்களை உறுப்பினராக வேண்டும் என்ற முழு மூச்சோடு ஒவ்வொரு கிளைக் கழகச் செயலாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் செயல்பட்டு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று பேசினார்.


கிளை செயலாளர்களுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கும் படிவத்தை வழங்கினார், உடன்  ஒன்றிய பொருளாளர் கபில்(எ) கமலக்கண்ணன், அவை தலைவர் சண்முகம், காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மதன் வழக்கறிஞர் நட்ராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேகா கார்த்திக், கவுன்சிலர்கள் ராபர்ட் (எ) ராஜ்குமார், கே விஜயரங்கன், கே ராஜேந்திரன், சாந்தகுமார், ஆனந்தி கோதண்டம், பரமேஸ்வரி சீனிவாசன் மற்றும் கிளை செயலாளர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/