கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈரோடு மாவட்ட மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 மே, 2023

கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈரோடு மாவட்ட மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள பெங்களூர் சென்றுள்ள ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி பெங்களூர், சாம்ராஜ் பேட் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வேட்பாளர் பாஸ்கர் ராவ்வை ஆதரித்து பெங்களூர், சாம்ராஜ் பேட் தொகுதிக்குட்பட்ட பக்ஷி கார்டன், எஸ்.கே.ஆர். மார்க்கெட் வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்களித்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு  பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.


தேர்தல் பிரச்சார பரப்புரையின் போது தேசிய பிறமொழிப் பிரிவு மாநில தலைவரும் தமிழகம் சார்பில் கர்நாடக மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளருமான ஜெயக்குமார், மகளிர் அணி மாநிலத் துணைத் தலைவர் திருமதி. மதிவதன கிரி, ஈரோடு தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி. புனிதம் ஐயப்பன் அந்த பகுதியின் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர். 


நடைபெற்ற பிரச்சார பயண ஏற்பாடுகளை சாம்ராஜ் தொகுதியின் பொதுச் செயலாளர் நாகலிங்கம் மற்றும் மண்டல் தலைவர் கவிதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/