புதுச்சேரி வாணரப்பேட்டை, நாகமுத்து மாரியம்மன் கோயில் வீதியில் சிமெண்ட் சாலை-வாய்க்கால் அமைக்கும் பணியினை உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 ஜூலை, 2023

புதுச்சேரி வாணரப்பேட்டை, நாகமுத்து மாரியம்மன் கோயில் வீதியில் சிமெண்ட் சாலை-வாய்க்கால் அமைக்கும் பணியினை உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி ஆய்வு.


புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோயில் வீதியில் புதுவை நகராட்சி மூலம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 13 லட்சத்து 40ஆயிரம் செலவில் வாய்க்கால் மற்றும் சிமெண்ட் சாலை மேம்படுத்தல் பணி உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  தலைமை தாங்கி பூமி பூஜை செய்து மார்ச் மாதம் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது வைத்தார். 

தற்பொழுது அங்கு வாய்க்கால் கட்டி கான்கிரீட் சிமெண்ட் போட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது அப்பணியை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், பரமானந்தம், தொகுதி செயலாளர் சக்திவேல் அவைத்தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி துணை செயலாளர் ஆரோக்கியராஜ்,கிளை செயலாளர்கள் சந்துரு, காலப்பன், சகாயம், ராகேஷ், கழக சகோதரர்கள் வெங்கடேஸ்வரன், கணேசன், நடேசன், சிவக்குமார், முனுசாமி, ஜான் ஆகியோர் உடன் இருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/