திருப்பூரில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க ரூ 10 லட்சம் நிதி உதவி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

திருப்பூரில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க ரூ 10 லட்சம் நிதி உதவி

திருப்பூரில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க ரூ 10 லட்சம் நிதி உதவி மாவட்ட ஆட்சியர் வழங்கினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப,, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து முறையிட்டனர். மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வுகான அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த கூட்ட அரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பொங்கலூர் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் நிதிக்கான ரூ 10 லட்சம் காசோலையை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப, வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் காஜா மொய்தீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad