மதுரையில் முறையான நம்பர் பிளேட் இல்லாத 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

மதுரையில் முறையான நம்பர் பிளேட் இல்லாத 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ட பொம் மன் சிலை முன்பு உரிமையாளரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர். மதுரை தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். 


அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள், விதி மீறும் வாகனங்களை கண்கா ணித்து அவர்களுக்கு உரிய தண்டனையும், அபராதமும் விதித்து வருகின்றனர். மதுரை மாநகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் முறையாக நம்பர் பிளேட் இல்லாமல் குற்றச்செயல்க ளில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந் தது. இந்த நிலையில் மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை துணை ஆணையர் குமார் தலைமையில், மாநகர பகுதிகள் முழுவதும் தீவிர வாகன சோதனை இன்று மேற் கொண்டனர். 


இதில் இரண்டு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகன பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுரை கூறினர். மேலும் முறையாக நம்பர் பிளேட் பொருத்தி மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் அகற்றப்பட்டு புதிய நம்பர் பிளேட் வைத்து மதுரை பெரியார் பேருந்து நிலையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/