தூத்துக்குடி - இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 4 பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 4 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 99 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில்ராஜ் நடவடிக்கை.


கடந்த 04.07.2023 அன்று தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி எப்.சி.ஐ ரவுண்டானா சந்திப்பு எதிரே வைத்து அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மகேஷ்குமார் (37) என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்த சரவணன் மகன் பாலா (எ) பாலமுருகன் (23), புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்தவர்களான ராமர் மகன் அழகுமுத்து (21) மற்றும் சுடலைமுத்து மகன் மாதேஸ்வரன் (எ) மாரீஸ் (23) ஆகியோரை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.


அதேபோன்று கடந்த 20.07.2023 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சத்யாநகர் பகுதியில் வைத்து முன்விரோதம் காரணமாக ஒரு பெண்ணிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்தக்குடி கீதாஜீவன் நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் உதயா (எ) உதயமூர்த்தி (23) என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.


மேற்படி வழக்குகளின் எதிரிகளான பாலா (எ) பாலமுருகன், அழகுமுத்து, மாதேஸ்வரன் (எ) மாரீஸ் மற்றும் உதயா (எ) உதயமூர்த்தி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.


அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில்ராஜ் தூத்துக்குடி புதுக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்த சரவணன் மகன் 1) பாலா (எ) பாலமுருகன், புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்தவர்களான ராமர் மகன் 2) அழகுமுத்து, சுடலைமுத்து மகன் 3) மாதேஸ்வரன் (எ) மாரீஸ் மற்றும் தூத்தக்குடி கீதாஜீவன் நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் 4) உதயா (எ) உதயமூர்த்தி ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மேற்படி 4 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 12 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2 எதிரிகள் உட்பட 99 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad