மதுரையில் சுதந்திர தினத்தைெயாட்டி 5 அடுக்கு பாதுகாப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

மதுரையில் சுதந்திர தினத்தைெயாட்டி 5 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினத்தைெயாட்டி மதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில், விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழு–வதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங் கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள் ளது. மதுரையில் தீவிர பாது–காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மதுரை விமான நிலை–யத்துக்கு வரும் வாகனங் களை பிரதான நுழைவாயில் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங் களை பாதுகாப்பு படையி–னர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கின்றனர்.


அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டேன் மாநாட்டின் போது தொண்டர்கள் வந்து செல்வதற்கு ஏற்ற சூழலை கட்சியினர், மூத்த கட்சி நிர்வாகிகள் மேற்பார்வையில் இந்த மாநாட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டு அரங்கம், நுழைவு வாயில், உணவு வழங்கப்படும் கூடம்,
1989 ஆம் ஆண்டு 1989 இல் நடைபெற்ற சம்பவம் ஞாபகம் வந்து அதை வெளிப்படுத்தியுள்ளதாக மக்கள் பார்க்கிறார்கள். மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டனர். எம்பி கனிமொழி இதில் சில கருத்துக்களைச் சொன்னார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 89 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வை குறித்து பேசினார். அப்போது நானும் சட்டமன்ற உறுப்பினராக அங்கு இருந்தேன் நீங்கள் அடிப்படையில் அதை நான் இங்கு தெரிவிக்கிறேன். சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் எதிர்க்கட்சியின் வராமல் பெண்ணென்றும் பாராமல் ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது.பட்ட பேரவையில் முதல்வர் கருணாநிதி பதில் அளிக்க ஜெயலலிதா பதிலளிக்க முற்பட்ட போது தான் இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது கே கே எஸ் எஸ் ஆர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் தடுத்தனர். தற்போது முக்கிய அமைச்சராக இருப்பவர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார். ஒரு சில அமைச்சர்கள் அவரை கடுமையாக தாக்கினார். மிக மோசமான நாளைய தினம் சட்டப்பேரவையில் கருப்பு தினமாக பார்க்கிறேன். சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட சம்பவம் பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு நடைபெற்றது இல்லை. ஆனால் முதல்வர் இதை கொச்சைப்படுத்தி பேசுகிறார்.இந்தியா என்கிற பெயர் மக்களுக்கானது அதை வைத்து விட்டார்கள் அதுவே தவறு.


பெங்களூர் மாநாட்டில் இந்த ஆதரவு வேண்டுமென்றால் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கெஜ்ரிவால் கோரிக்கை வைத்தார். கண்டிஷன் போட்டு தான் கூட்டணியில் அமர்ந்தார் hdவால் அவருக்கு அந்த த்ராணி உள்ளது. ஆனால் தமிழகத்தில் காவிரி விவகாரத்தில்  எதிர்வாலை போல உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எங்களுக்கான பங்கை காவிரியில் திறந்து விட்டால் இந்த கூட்டத்தில் இடம் பெறுவேன் என்று முதல்வர் அறிவிப்பு கொடுத்திருந்தால் தண்ணி வந்து சேர்ந்திருக்கும். பெங்களூரில் நீர்வளத் துறை அமைச்சரை முதல்வர் சந்தித்தார் அப்போதாவது இது சம்பந்தமாக பேசி இருக்கலாம்.


ஜாதி சண்டை மத சண்டை எல்லாம் திமுக ஆட்சியில் தான் பார்க்க முடியும் அதுதான் தொடர்ந்து வருகிறது.நாடாளுமன்றத்தில் இதற்காக குரல் எழுப்பினார்களா. 22 நாட்கள் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக பாசன விவசாயிகள் உரிமையை பெறுவதற்காக நலம் மன்றத்தை ஒத்தி வைக்க செயல்பட்டது. நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நீட் தேர்வில் ரத்து செய்ய என்ன முயற்சி எடுத்தார்கள்.முதல்வர் கண்ணெதிரே ஒரு பெண் மீது நடைபெற்ற தாக்குதல் நடைபெற்றதற்கு என்ன தண்டனை கொடுத்தார்கள். ஆனால் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து மீண்டும் முதல்வரானார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad