கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட முதியவர்....; 7ஆம் நாளில் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி.....! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட முதியவர்....; 7ஆம் நாளில் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி.....!

கேரளா.மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி. 68 வயதான இவர் மரம் வெட்டும் தொழிலாளி ஆவார்.இவர் திருமணமாகாதவர். கடந்த பல வருடங்களாக உறவினர்களை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். 


பெரும்பாவூர் பஸ் பேருந்து நிலையத்தில் தான் தங்கி வந்தார், எப்போதாவது அவருடைய உறவினர்கள் வீட்டுக்கு செல்வது வழக்கம், சில திருட்டு வழக்குகள் இவர் மீது உள்ளது, இவர் கைதாகி பலமுறை சிறைக்கு சென்றுள்ளார். 


இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி அங்கமாலி பகுதியில் ஒதுக்குப் புறமான இடத்தில் ஒரு முதியவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது, உடனே விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, இந்த விபரம் ஆண்டனியின் உறவினர்களுக்கு தெரிய வர, எர்ணாகுளம் அரசுமருத்துவமனை பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த உடலைப் பார்த்த அவர்கள் சில அங்க அடையாளங்களை வைத்து இறந்த ஆண்டனி தான் என்பதை உறுதி செய்தனர்.


இதை எடுத்து உடனே போலீசார் அவர்களிடம் ஒப்படைத்தனர் தொடர்ந்து உடல் ஆழ்வார் செயின்ட் ஜோசப் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது, அதைத்தொடர்ந்து நேற்று (ஆக. 24) ஏழாவது நாள் பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று வரை இறந்தது ஆண்டனி தான் என்று அவரது உறவினர்கள் கருதி இருந்த நிலையில், தற்செயலாக ஆண்டனி நேற்றைக்கு ஊருக்கு வந்தார். அவரைப் பார்த்த ஊர் மக்களும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். 


நடந்த விவரத்தை உறவினர்கள் கூறியதை கேட்டு ஆண்டனியும் அதிர்ச்சி அடைந்தார், இது குறித்து அங்கமாலி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்திய போது, இறந்தவர் ஆண்டனி இல்லை என்பதை உறுதி செய்தனர், அடக்கம் செய்த உடல் யாருடையது என்பது குறித்து மேலும் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.


"அது எங்கள் தவறல்ல. குடும்பத்தினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடலை அடையாளம் காட்டினர். அதன் பின்னரே உடலை அவர்களிடம் ஒப்படைத்தோம்" என்று ஒரு அதிகாரி கூறினார். டிஎன்ஏ விவரக்குறிப்பைப் பயன்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது மற்றும் இறந்தவரை அடையாளம் காண மாநில குற்றப் பதிவுப் பணியகத்தைSCRB) அணுகியுள்ளது.


"இறந்த நபரின் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய காகிதத்தை மீட்டோம். அதில், 'ஜனார்த்தனன்' என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. அது அவருடைய பெயராக இருக்கலாம். 'ஜனார்த்தனன்' என்ற பெயரில் காணாமல் போன வழக்குகளைக் கண்டறிய நாங்கள் SCRB-யை அணுகியுள்ளோம்" என்று அந்த அதிகாரி கூறினார். இறந்தவர் என நம்பப்பட்டவர் உயிருடன் வந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

1 கருத்து:

Post Top Ad

*/