தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி பழைய பேரூந்து நிலையம் பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு  இடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
 

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேரூந்து நிலையம் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கையெழுத்திட்டு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 


அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் "தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பேரணி, கையெழுத்திடும் முகாம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


மேலும் இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதால் இளவயதிலேயே ஆண்மையை இழந்து வயதானவர்கள் போல உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு மட்டும் அல்லாது அவர்களது எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகமல் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துகொண்டு எதிர்காலங்களில் சிறந்தவர்களாக வரவேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 


அவரை தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், உதவி ஆய்வாளர் முருகபெருமாள் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர் முன்பு செல்பி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad