கடலூரில் சுகாதார துறையினர் அதிரடி சோதனை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

கடலூரில் சுகாதார துறையினர் அதிரடி சோதனை.

கடலூர் மாவட்டம், கடலூர்  மாநகராட்சி நகர் நல அலுவலர் அப்துல் ஜாஃபர் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் கிருஷ்ணராஜ், மதியழகன் மற்றும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள்  கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள  பழக்கடைகள்,  தேநீர் கடைகள், இனிப்பு கடைகள், உணவகங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஒருமுறை மட்டும் பயன்படும் பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா என்று சோதனை செய்தனர்.


சோதனையில் 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பிளாஸ்டிக் பைகளை வியாபாரத்திற்கு பயன் படுத்திய கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


- கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad