மும்பை - நாகர்கோயில் ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டியில் நின்று செல்ல வேண்டுமென பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து மும்பை-நாகர்கோவில் ரெயில் சாமல்பட்டியில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது, ரயில் எண்.16339/16340 மும்பை - நாகர்கோயில் ரெயில் மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்கள் சோதனை அடிப்படையில் சாமல்பட்டியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லக்குமார் பங்கேற்று இனிப்புகளை வழங்கினார். முன்னாள் சேர்மனும் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆறுமுகம் வட்டாரத் தலைவர்கள் திருமால் தனஞ்செயன் மின் டிகிரி ரவி, மாவட்டத் துணைத் தலைவர்கள் விவேகானந்தன் சாந்த சீலன், ராமன், சேகர். காங்கிரஸ் நிர்வாகிகள் பூக்கடை மகி அண்ணாதுரை மகேந்திரன் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
ரயில் எண்.16339 மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மும்பையில் இருந்து இரவு 8.35 மணிக்குப் புறப்பட்டு சாமல்பட்டியில் நின்று செல்லும்.
ரயில் எண்.16340 நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, சாமல் பட்டியில் நிற்கும்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
எஸ்.சத்திய நாராயணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக