மதுரை அருகே, சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில், ஆடி மாத பிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும், பிரளயநாத (சிவன்) கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பாஜக மாநில நிர்வாகி மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருதுபாண்டியன், தக்கார் இளமதி பணியாளர்கள் பூபதி வசந்த் மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர் சிவ பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். பூஜைகள் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதே போல, மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோவில், வர சித்தி விநாயகர் கோவில், மேலமடை சௌபாக்கிய விநாயகர் கோவில், திருமங்கலம் மீனாட்சி சுந்தர திருக்கோவில், மேலூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மதுரை அண்ணாநகர், வைகை காலனி, வைகை விநாயகர் கோயில், மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயம் ஆகிய திருக்கோவில்களில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி மற்றும் சிவபெருமானுக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதை அடுத்து, பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக