10.08.23 வடலூர் புதுநகர் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் வடலூர் புதுநகர் பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாத காரணத்தினால் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அவதி அடைந்து வந்தனர் இந்நிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித் தரக் கோரி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது இந்நிலையில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது இந்த புதிய வகுப்பறையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கூடுதல் ஆட்சியர் மதுபாலன் திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் வடலூர் நகராட்சி ஆணையர் பானுமதி நகர்மன்ற தலைவர் சிவக்குமார் நகரச் செயலாளர் தன.தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக