இராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் (முத்துக்கடை பஸ் நிலையம்) திமுக - வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி, சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
இதில் திமுகவின் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர். வினோத் வரவேற்று பேசினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தை அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் தொடங்கி வைத்தார். தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகர். லெனின் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
இந்த உண்ணாவிரதம் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள். ஏ.கே.சுந்தரமூர்த்தி, சிவானந்தம், துரை மஸ்தான், ஏ.வி.சாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள். சுந்தரம், அசோகன், கண்ணையன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர். ஜெயந்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள் தலைமையில் நெமிலியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக