சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மானாமதுரை நிர்வாகிகள்.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மானாமதுரை நிர்வாகிகள்..


சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மானாமதுரை நிர்வாகிகள்..

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் அக்கட்சியின் தலைவர் திரு டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு டிடிவி தினகரன் அவர்கள் கூறுகையில் எப்போதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் ஈடுபட்டு மக்களுக்காகவே உழைத்து வரும், ஒருபோதும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அமமுக ஒன்றினைவதுக்கான வாய்ப்பில்லை என்று காரசாரமான மேடையில் பேசினார். பின்னர் பல தீர்மானங்கள் அனைத்து நிர்வாகிகள் முன்னிலை இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் திரு குரு. முருகானந்தம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இப்பொதுக்குழு கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், முன்னோடிகள் மற்றும் மானாமதுரை தொகுதி அமமுக சார்பாக மானாமதுரை ஒன்றிய கழக செயலாளர் மானம்பாக்கி இரா. சுரேஷ்பாபு, மாவட்ட சுற்றுப்புறச்சூழல் மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் திரு நா. மணிகண்டன் நாகேந்திரன், மாவட்ட சுற்றுப்புறச்சூழல் மற்றும் விழிப்புணர்வு பிரிவு தலைவர் திரு சசிக்குமார், மாவட்ட இணை செயலாளர் மணி. பாண்டியராஜன், மாவட்ட பேரவை தலைவர் திரு ராஜசேகர், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் மிளகனுர் திரு மதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/