வேடசந்தூர் அதிமுக கட்சியின் சார்பாக வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு வேடசந்தூர் தொகுதி வடமதுரையில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் மாநாட்டிற்கு வரவேற்பு போஸ்டர்களும், ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.
முன்னாள் அதிமுக வேடசந்தூர் எம்எல்ஏக்கள் பழனிச்சாமி, பரமசிவம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்டோக்களில் போஸ்டர்களையும், இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களில் ஸ்டிக்கர்களையும் ஒட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.தமிழககுரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக