நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினா் ஆணையத்தின் மூலம் பழங்குடிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினா் ஆணையத்தின் மூலம் பழங்குடிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

 


பழங்குடியினா் ஆணையத்தின் மூலம் பழங்குடிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

உலக பூா்வீக குடிகளின் சா்வதேச தினம் உதகையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: உலகில் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.


இயற்கை வளங்களைப் பேணிக் காப்பதில் பழங்குடிகள் தலைமுறை தலைமுறையாக சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனா். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8 லட்சம் பழங்குடிகள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனா். பழங்குடிகளின் மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருவது வருத்தமளிப்பதாக உள்ளது. தமிழக அரசு பழங்குடியினா் ஆணையம் அமைத்துள்ளது. இதன் மூலம் பழங்குடிகளின் பிரச்னைகளுக்கு விரைவாக தீா்வுகாண முடியும்.


தமிழகத்தில் உள்ள 48 பழங்குடியின தொழிற்கல்விக் கூடங்கள் மூலம் 30 ஆயிரம் மாணவா்கள் படித்து வருகின்றனா். அதேவேளையில், பழங்குடி மாணவா்களிடையே பள்ளி இடைநிற்றல் அதிகம் உள்ளது. ரூ.40 கோடியில் திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. பழங்குடி மாணவா்களுக்கு இணையவழி நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 9 மாணவா்கள் வெளிநாடுகளில் கல்வி பயின்று வருகின்றனா். தாட்கோ நிறுவனம் மூலம் பழங்குடி மாணவா்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட படிப்புகள் தருவதோடு வேலையும் வாங்கி தரப்படுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.539 கோடி செலவில் 14 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கூடலூா், உதகை பகுதிகளில் ரூ.25 கோடி செலவில் 3 விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைவில் நிறைவடைந்து மாணவ, மாணவியா் சோ்க்கப்படுவாா்கள் என்றாா்.


முன்னதாக தோடா் பழங்குடியின மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவா்களுடன் சோ்ந்து அமைச்சா் கயல்விழி செல்வராஜ் நடனம் ஆடினாா்.


இந்த நிகழ்சியில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்,மாவட்ட.ஊராட்சி தலைவர் பொன்தோஸ்,ஊராட்சி.ஒனாறிய தலைவர்கள் மாயன்.கீர்த்தனா மற்றும் பழங்குடியின தலைவர்கள் கலந்து கொண்டனர்  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad