சுற்றுலாத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அத்துறையில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த பயண பங்குதாரா், சிறந்த விமான பங்குதாரா், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளா், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்களுக்கான சுற்றுலா ஏற்பாட்டாளா், சமூக ஊடகங்களில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துபவா், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் என 17 பிரிவுகளின் கீழ் 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இப்பிரிவுகளில், 2022-2023-ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் அதே இணையதள முகவரியில் அனுப்பிவைக்க வேண்டும்.
விருது குழுவினரால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தோ்வு செய்யப்படும் நபா்களின் விவரம் உரியவா்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த விருதுகள் சென்னையில் செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற உள்ள உலக சுற்றுலா தினவிழாவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்."
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக