பசுமை காய்கறிகள் மற்றும் பழங்களை வீடுகளுக்கே விற்பனை செய்வதற்கான திட்டத்தின் கீழ் நடமாடும் வாகனங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்களை மாநகராட்சிகளில் நேரடியாக வீடுகளுக்கே விற்பனை செய்வதற்காக திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் ஆறு மாநகராட்சிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடி ஆகும் காய்கறிகள் மற்றும் பழங்களை பசுமை மாறாமல் நுகர்வோருக்கு வீடு தோறும் வழங்கிட ஏதுவாக ரூபாய் 2 லட்சம் நிதியில் இரண்டு புதிய நடமாடும் வாகனங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
இந்த நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கு விற்பனை விலை அருகில் உள்ள உழவர் சந்தை விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது மேலும் பொதுமக்கள் இத்திட்டத்தின் கீழ் வேளாண்துறை மூலம் பசுமையான காய்கறிகளை தங்கள் வீட்டிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் ,மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம்,கடலூர் வேளாண் துணை இயக்குனர் பூங்கோதை வடலூர் வேளாண்மை அலுவலர் நதியா மற்றும் வேளாண்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக