திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக இளைஞர் அணி தலைவரின் பதிவின் எதிரோலி; விரைந்து தூய்மைப்படுத்திய நகராட்சியினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக இளைஞர் அணி தலைவரின் பதிவின் எதிரோலி; விரைந்து தூய்மைப்படுத்திய நகராட்சியினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டில் தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கி அருகே உள்ள விநாயகர் கோயில் முன்பு இரவு நேரங்களில் குப்பைகளை கொட்டப்படுவதால் அங்கு அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளது. ஆனால் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மைப்படுத்தாமல் இருப்பதால் அங்குள்ள பொதுமக்களுக்கு தொற்று நோய் பெரும் அபாயம் உள்ளது.


பலமுறை பாஜக கட்சியினர் சார்பில் தூய்மைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு பலனும் இல்லாததால், இன்று அங்குள்ள அனைத்து குப்பைகளை பாஜக இளைஞர் அணி தலைவர் ரைட்டர் (எ) வினித் தலைமையில் நகராட்சி வளாகம் முன்பு கொட்டப்படும் என சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் நகராட்சியினர் சார்பில் விரைந்து அந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர்.


இதுபோன்ற பணிகளை விரைந்து தாராபுரத்தில் உள்ள 30 வார்டுகளில் உள்ள குப்பைகளை தினமும் அப்புறப்படுத்த வேண்டும் என இதன் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad