இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி, இ.காப., உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார். (இணைய வழி குற்றப்பிரிவு) அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ராஜாகுமார் தலைமையில், சைபர்கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இராணிப்பேட்டை அரசினர் ITI கல்லூரி மற்றும் சிப்காட் Pioneer Wincon energy system pvt Ltd ஆகிய இடங்களில் நடைபெற்றது.
சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிதி நிறுவன மோசடி,போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி,போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம் உதவி எண்:1930, www.cybercrime.gov.in இணையதள முகவரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆய்வாளர் தியாகராஜன் CCPS, சுமார் 150 கல்லூரி மாணவர்கள், 10 ஆசிரியர்கள் மற்றும் 10 கம்பெனி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக