மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்ரீ வேலன் ஜெராக்ஸ் மையம் திறப்பு விழா.
கும்பகோணம் அருகே தாராசுரம் திருமஞ்சன வீதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் இணை செயலாளர் மாற்றுத்திறனாளி ஆர் ரமேஷ் அவர்கள் முயற்சியில் மாற்று திறனாளிகளுக்காக புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வேலன் ஜெராக்ஸ் மற்றும் இணையதளம் மையம் திறப்பு விழா திங்கட்கிழமை நடந்தது.
இதற்கு தாராசுரம் 31 வது மாமன்ற உறுப்பினருமான ,மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா.அசோக் குமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து புதிய ஜெராக்ஸ் சென்டர் மையத்தை திறந்து வைத்தார். இந்த மையத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைத்து நலத்திட்டதஉதவிகளும், விண்ணப்பங்களும்,அடையாள அட்டை, கலர் பிரிண்ட் அவுட்,ஜாப் ஒர்க்ஸ், உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், சங்கம் நிர்வாகிகள் பொதுமக்கள், உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக