திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெறும். இவ்விழாவில் செங்கத்தின் நகர பகுதிகளில் வைக்க படும் விநாயகர் சிலைகள் முக்கிய தெருக்களின் வழியே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
இவ்விழாவில் எவ்வித அசம்பாவிதம் ஏற்படாத வகையில் நடைபெற செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் செங்கம் காவல் ஆய்வாளர், பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி, இஸ்லாமிய கமிட்டி சார்பில் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இந்து முன்னணியினருக்கும், இஸ்லாமிய கமிட்டியினருக்கும் வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- செங்கம் செய்தியாளர் கலையரசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக