தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தற்காலிக உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தற்காலிக உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.


திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-        தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர் 12) ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு சில்லறை விற்பனை தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பத்தாரர்கள் கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, 2 வழிகள், சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான நீல வரைபடம் 6 நகல்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும் கடை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த கட்டிடமாக இருப்பின் அதற்கான ஆவணம், வாடகை கட்டிடமாக இருப்பின் ரூ.20/- க்கான முத்திரை தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப்பத்திரம், தற்காலிக உரிமத்திற்கான கட்டணம் ரூ.600/- ஐ எஸ்பிஐ வங்கி மூலம் அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான், இருப்பிடத்திற்கான ஆதாரம், சொத்து வரி ரசீது, விண்ணப்பதாரர் புகைப்படம்- 2 (பாஸ்போர்ட் சைஸ்) ஆகியவற்றை இணைக்க வேண்டும்.மேலும் விண்ணப்பதாரர்கள் பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொது மக்களுக்கு எவ்வித சிரமும் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டுமே விண்ணப்பம் அளிக்க வேண்டும்.ஏற்கனவே கடந்த ஆண்டு உரிமம் பெற்ற நபர்கள் அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் அளித்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.                    வெடிபொருள் சட்டம் 2008 விதி எண் 106ன் படி உரிமத்தின் காலம் 30 நாட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கூறிய விதிமுறைகளை கடைப்பிடித்து தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பதாரர்கள் வருகிற 31ந் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த தேதிக்கு மேல் ஆன்லைனில் இ-சேவை மையங்கள் மூலமாகவும் மற்றும் அஞ்சல் அல்லது நேரடியாகவோ வரும் உரிமம் கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் நிரந்தர பட்டாசு சில்லரை விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழிமுறை பொருந்தாது.                   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.            அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/