தூத்துக்குடி மாவட்டம், பிப்.22, பாரதப் பிரதமர் மோடி வருகின்ற 28ஆம் தேதி தூத்துக்குடி வருகை தருகிறார், அதன் படி பிரதமர் மோடியின் 27 மற்றும் 28 ஆம் தேதிக்கான தமிழக பயணம் குறித்த பயண திட்டம் வெளியிடபட்டுள்ளது.
27.02.2024 புதன்கிழமை, மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்.
மதியம் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார் பிரதமர் 2.45 முதல், 3.45 வரை என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
பின் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து, பல்லடம் விரைந்து, அங்கிருந்து 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார்.
5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார், மாலை 6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார். அன்றைய தினம் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்கிறார்.
28.02.2024 வியாழக்கிழமை
காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்.
8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு வருகிறார்.
காலை 9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு திருநெல்வேலி செல்கிறார். முற்பகல் 11.15 to 12.15 மணிக்கு பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார்.
நண்பகல் 12.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார்.
இவ்வாறு மத்திய அரசின் செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செய்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக