தூத்துக்குடி மாவட்டம், பிப்.15, தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடைகள் நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் முதலாவது சுற்று புரூசெல்லாசிஸ் (Brucellosis) நோய் தடுப்பூசிப்பணி 15.02.2024 முதல் 15.03.2024 முடிய நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தகவல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதலாவது சுற்று புரூசெல்லாசிஸ் 15.03.2024 முடிய நடைபெறவுள்ளது. தேசிய கால்நடைகள் நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் (Brucellosis) நோய் தடுப்பூசிப்பணி 15.02.2024 முதல் 15.03.2014 முடிய நடைபெற உள்ளது.
கருச்சிதைவு நோய் என்பது புருசெல்லா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோயால் கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவு போன்ற பல காரணங்களினால் இழப்பு ஏற்படுகிறது.
மேலும் இந்நோய் மனிதர்களையும் தாக்கும் தன்மையுடையது. இந்நோயினை தடுக்க 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி ஒருமுறை செலுத்துவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியினை பெற இயலும்.
நோயின் அறிகுறிகள் :
1) கருப்பையில் நோய் ஏற்படும் காரணத்தினால் சினை மாடுகளில் கருத்தரித்த 5 முதல் 8 மாத காலம் வரையிலும் கன்று வீச்சு ஏற்படும்.
2) கன்று வீச்சு ஏற்பட்ட பின் நஞ்சுக்கொடி கருப்பையில் இருந்து வெளிவராமல் தங்கிவிடும்.
3) பெண் பிறப்புறுப்பிலிருந்து சீழ் போன்ற திரவம் வடியும். மேலும் மூட்டு வீக்கம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு.
4) காளைகளில் விரைகள் வீங்கி காணப்படும்.
5) கன்றுகள் பலவீனமாக அல்லது இறந்து பிறக்கும்.
இந்நோய் தாக்குதலினால் பால் உற்பத்தி மற்றும் கருத்தரிப்பு விகிதம் குறையும்.
எனவே கால்நடை வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எவ்வித விடுபாடுமின்றி தங்கள் கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக