தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மார்ச் 15. நவதிருப்பதி கோவில்களில் இரண்டாவது கோயில் நத்தம் விஜயாசன பெருமாள் கோயிலாகும்.
மாசி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு நேற்று புஷ்பாஞ்சலி சேவை நடந்தது. கடந்த மார்ச் 3 - ந்தேதி நத்தம் கோயிலில் கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோற்சவம் துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 9 மணிக்கு திருமஞ்சனம் 10 மணிக்கு திருவாராதனம் பின்னர் 10.30 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவை திருவாய்மொழி பிள்ளை திருமலாச்சாரி தலைமையில் சீனிவாசன், சேது, சம்பத், பட்சி ராஜன் நரசிம்மன், அரவிந்தன் திருவேங்கடத்தான், வேங்கட கிருஷ்ணன், கெருடப்பன், ஆகியோர் சேவித்தனர், தொடர்ந்து பலவகையான புஷ்பங்களால் துவாதச நாமம் சொல்லி அர்ச்சகர்கள் ராஜகோபாலன், கண்ணன், கிருஷ்ணன், பிச்சைமணி, சுந்தர நாராயணன் ஆகியோர் அர்ச்சனை செய்தனர்.
இந்நிகழ்வில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன். கண்ணன், அறங்காவல்குழு உறுப்பினர்கள் அருணா தேவி, மாரியம்மாள், முருகன், முத்துகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் நிர்வாக அதிகாரி கோவலமணிகண்டன் தக்கார் தமிழ்ச் செல்வி ஆய்வாளர் நம்பி, சீனிவாச அறக்கட்டளை சூப்பர்வைசர்கள் பரகாலசிங்கன், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக