முக்காணி -ஆத்தூர் இணைப்பு புதிய தாமிரபரணி ஆற்றுப்பாலம் சரி செய்ய கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 மார்ச், 2024

முக்காணி -ஆத்தூர் இணைப்பு புதிய தாமிரபரணி ஆற்றுப்பாலம் சரி செய்ய கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 18, ஆத்தூர் to முக்காணி பகுதியில், திருச்செந்தூர் to தூத்துக்குடி போக்குவரத்தின் உயிர் நாடியான தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பழைய பாலம் உள்ளது. 

பல புயல் வெள்ளம் வந்தபோதும் இன்று வரை  கம்பீரமாக காட்சியளித்து போக்குவரத்தை சீர் செய்து வருகிறது. பாலம் சிறியதாக இருந்தாலும் வெள்ளம் வரும் போது பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதாலும் இதன் அருகே  சுமார்  10 ஆண்டுகளுக்கு முன் புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது. 


புதிய பாலம் கட்டிய சிறிது நாட்களிலேயே பாலத்தின் இணைப்பில் பழுது ஏற்பட்டு பின்பு சரி செய்யப்பட்டது. தற்போது கடந்த 2023 டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழையினால் வரலாறு காணாத பெரும் வெள்ளத்தில் பல பாலங்கள் இடிந்து விழுந்தன. 


முக்காணி ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் உள்ள சிறிய பாலத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேல் உள்ள தடுப்புக் கம்பிகள் வெள்ளத்தில் சின்னாபின்னமாகி உடைத்து நொறுக்கப்பட்டன. ஆனாலும் பாலம் கம்பீரமாக நின்று இன்று வரை போக்குவரத்தை சீர் செய்து வருகிறது. 


ஆனால் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் நடுப்பகுதியில் உள்ள தூண் ஒன்று கனரக வாகனம் சென்ற போது பாரம் தாங்காமல் இறங்கி பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதனால் வெள்ளத்திற்கு பிறகு இப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாலம் மூடப்பட்டுள்ளது. முன்பு ஒரு வழி பாதையாக பயன்படுத்த பட்டு வந்த சிறிய பாலத்திலேயே இரு வழி தடத்திலும் போக்குவரத்து செல்வதால் வாகனங்கள் ஸ்தம்பிக்கிறது.  


ஒரே நேரத்தில் எதிரெதிரே இரு வாகனங்கள் வரும்போது நின்று, ஒன்றுக்கொன்று விலகி தாமதமாக சென்று வருகின்றன.
வெள்ளம் வந்து மூன்று மாத காலத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதிப்புகளும் சீர் செய்யப்பட்டு வழக்கமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.


ஆனால் திருச்செந்தூர் தூத்துக்குடி முக்கிய போக்குவரத்து நடைபெறும் தாமிரபரணி ஆற்று பெரிய பாலம் மூடப்பட்டு மூன்று மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது இவ்வழியாக உள்ளூர் தி.மு.க அமைச்சர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை நாள்தோறும் சென்ற வாறு இருந்தாலும், யாரும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாததால்  தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் அபாயகரமான சிறிய பாலத்தில் போக்குவரத்து நடந்து வருகிறது 


எனவே இந்த பிரச்சினையை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பாலத்தை சரி செய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே இப்பகுதியில் மக்களின் கோரிக்கையாக உள்ளது. பாலம் பழுது பார்த்த பின் இப்பாலம் அதிக பாரம் தாங்கும் வல்லமை இல்லாததால் பாலத்திற்கு முன் செக்போஸ்ட் அமைத்து அதிக பாரத்தோடு வரும் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி  வேறு வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விட வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் கோரிக்கை. 


மேலும் இரு பாலத்திலும் மின்விளக்கு அமைப்பது மற்றும் பராமரிப்பு  செலவினங்கள் அதிகமா இருப்பதால் தொடர்ந்து பாலம் இருளில் மூழ்கி கிடக்கிறது.  சோலார் மூலம் மின்விளக்குகள் அமைத்து அந்த மின்கம்பத்திலே விளம்பரம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டால் பாலம் தூத்துக்குடி மாவட்ட நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைகளால்  சோலார்  மின் விளக்குகளால் ஜொலிக்கும்.


அரசு நடவடிக்கை எடுக்குமா? ஊடகங்கள் அரசின் கவனத்தை கொண்டு செல்லுமா? என இப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/