ஆழ்வார்திருநகரி, மார்ச் 23, நாளை மாசி தேரோட்டம் காரணமாக மின் விநியோகம் ரத்து.
அதன்படி மின் விநியோகம் பொறியாளர் தெரிவித்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், திருச்செந்தூர் கோட்டம்,
ஆழ்வார் திருநகரி விநியோக பிரிவிற்கு உட்பட்ட ஆதிநாதர் திருக்கோவிலில் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் நாளை (24.03.24)காலை 7.30 மணி முதல் திருத்தேரோட்டம் முடியும்வரை ஆழ்வார் 2,4,5,7 மின்மாற்றியில் மின்னோட்டம் பெறும் தெற்கு மாசி தெரு,மேல மாசி தெரு,
திருச்செந்தூர் மெயின் ரோடு, மேல ரத வீதி, தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளிலும், திருத்தேரானது உயர் அழுத்த மின் பாதைக்கு அருகில் வரும்போது ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்தோப்பு, அப்பன்கோவில் வரதராஜபுரம் பகுதிகளில்
மின் நிறுத்தம் செய்யப்படும் என, நாசரேத்
உதவி செயற்பொறியாளர்/விநியோகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக