திருப்பத்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மரக்கட்டைகள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

திருப்பத்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மரக்கட்டைகள்


திருப்பத்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்.ஒருவரை கைது செய்து போலீசார் வனத்துறையிடம் ஒப்படைப்பு.


வாணியம்பாடி, டிச.23- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கருப்பனூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தி செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கருப்பனூர் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சாரதி (வயது 20) என்பவர் போர்ட் காரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மர கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.


அதனை தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து சாரதி என்பவரை கைது செய்து திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


மேலும் விசாரணையில்  கொடுமாப்பள்ளி பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (வயது 30) என்பவர் பி.கே.பி நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணவேணி என்பவருடைய வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு செம்மரம் வெட்டுவதற்காக ஆட்களை சேகரித்து அனுப்பி வைத்திருந்தது தெரிய வந்தது 


இந்த நிலையில் அங்குச்சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கே ஒரு தனி அறையில் செம்மரம் வெட்டுவதற்கான, ஆட்களை அனுப்பி வைப்பதற்கு 10 கோடாரி, டிராவல் பேக், டார்ச் லைட், மரம் அறுப்பதற்கான ரம்பம், மற்றும் லுங்கிகள் உடைகள் உள்ளிட்டவைகள் இருந்தன அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். 


மேலும் இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டைகள் வெட்ட ஆட்களை சேகரித்து வந்த விக்கி என்ற விக்னேஷ் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.


செம்மரக்கட்டைகளை வெட்டி திருப்பத்தூர் மைய பகுதியில் பதுக்கி வைத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


மேலும் இந்த குற்ற சம்பவத்தில் யார் பின்புலத்தில் இயங்குகின்றனர் எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் வனத்துறையினருக்கு தெரியாமல் இத்தனை நாட்கள் செம்மரம் கடத்தல் அரங்கேறியது எப்படி?.. சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ள..


திருப்பத்தூரில் செம்மர கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர் வாணியம்பாடி செய்தியாளர் இரா.மஞ்சுநாத் மற்றும்  தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad