காரைக்குளம் ஊராட்சி பொன்னியேந்தல் கிராமத்தில் 44 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடத்திற்கு அடிக்கல் நாட்டிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் காரைக்குளம் ஊராட்சி பொன்னியேந்தல் கிராமத்தில் அயோத்திதாசர் நிதியிலிருந்து சுமார் ரூபாய் 44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய சமுதாய கூடத்திற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளையான்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுப.மதியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மற்றும் முத்துக்குமார் காரைகுளம் ஊராட்சி செயலாளர் பழனி, உதவி செயற்பொறியாளர் கவிதா, வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ் செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் வினோத்குமார் மற்றும் மனோஜ் குமார், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் முருகேசன், அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக