கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் அனைவரும் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்தவாறு புது பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்ற கோஷத்துடன் தை திருநாளை வரவேற்றனர், இறுதியில் ஊழியர்கள் அனைவருக்கும் கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது, நிகழ்வில் வடலூர் நகராட்சி ஆணையர் ரஞ்சிதா, பொறியாளர் சிவசங்கரன், வடலூர் திமுக நகர செயலாளர் தன. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக