திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ஊராட்சியில் அம்பேத்கர் இளைஞர் நற்பணிமன்றம் சார்பில் அம்பேத்கர் புகைப்படம் பொருந்திய பீடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அருகில் குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ளதால், அதே பகுதியை சேர்ந்த சிலர் வேகத்தடை அமைத்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தினர், இங்கு வேகத்தடை அமைக்ககூடாது என அம்பேத்கர் படத்தை அவமதிப்பு செய்து, அம்பேத்கர் பீடத்தை சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நெக்குந்தி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, அம்பேத்கர் படத்தை அவமதிப்பு செய்தவர் மீது உரிய நடவடிக்கை என உறுதியளித்தின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அம்பேத்கர் படத்தை அவமதிப்பு செய்த மாற்று சமூகத்தை செய்தவர்களின் பெற்றோர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககூடாது என அவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது, அதனை தொடர்ந்து, காவல்துறையினர் அம்பேத்கர் படத்தை அவமதிப்பு செய்தவர்களை பிடிக்க தாமதம் செய்வதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வடக்கு மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ் தலைமையிலான விசிகவினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த போராட்டம் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது, அதனை தொடர்ந்து அம்பேத்கர் படத்தை அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக பிடிப்பதாக உறுதியளித்தின் பேரில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மற்றும் நெக்குந்தி கிராம மக்கள், அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அம்பேத்கர் படத்தை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்த போது, அம்பேத்கர் படத்தை அவமதித்த உண்மை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர், மற்றும், மாற்று சமூகத்தினரும் வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய வளாகத்தில் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது, அதனை தொடர்ந்து காவல்துறையினர் அம்பேத்கர் படத்தை அவமதித்ததாக 18 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பு.லோகேஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக