கள்ளக்குறிச்சி ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது
இன்று 6.1.2025 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவியாக சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26000/- இயற்கை மரனம் எய்தும் மாற்றுத்திறனாளிக்கான ஈமசடங்கு உதவித்தொகை ரூ.1,34,000/. க்கான காசோலைகளும் மாற்றுத் திறனாளிகளின் மகன் அல்லது மகள் கல்வி பயில்பவர்க்கான கல்வி உதவித்தொகை 4 நபர்களுக்கு ரு.12000/- வீதம் 16 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.172000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் வழங்கினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி முடநீக்குயல் வல்லுனர் திரு.பிரபாகரன். செயல் திறன் உதவியாளர் திரு.முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக