இராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் திறப்பு,
இராமநாதபுரத்தில் ரூ.4.44 கோடி மதிப்பீட்டில் இரண்டு தளங்கள் கொண்ட புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்த நிகழ்வில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பங்கேற்று ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக உட்கட்டமைப்புகளை பார்வையிட்டனர்
இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் முருகேசன், இராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக