தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார்.
மூலவர்,சண்முகர்,சத்ரு சம்ஹார மூர்த்தி, ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து வெளியே வந்த அவரை சூழ்ந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது.
மழை வெள்ளம் எச்சரிக்கை இருந்ததால் தாமதமாக கோவிலுக்கு வந்துள்ளேன். ஒரே நாளில் அறுபடை வீடுகளில் உள்ள முருகனை தரிசனம் செய்ய நீண்ட நாள் ஆசை முதலில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்துவிட்டு அடுத்தடுத்து மற்ற கோவிலுக்கு செல்ல உள்ளேன். எப்போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தாலும் மிக பாசிட்டிவாக இருக்கும், அமரன் வெற்றிக்கு நன்றி தெரிவிப்பது முக்கிய கடமையாக உள்ளது.
மேலும் பல வேண்டுதல்களை வைத்துள்ளேன். கோவிலுக்கு வந்தது மிகவும் திருப்தியாக இருந்தது. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும். கோவிலில் உள்ள கூட்டத்திலும் சிறப்பான தரிசனம் ஏற்பாடு செய்ததற்கு திருக்கோயில் நிர்வாகத்திற்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு..
இதைப் பற்றி இங்கே பேச வேண்டாம் வேறு இடத்தில் பேசிக் கொள்ளலாம் இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதுதான் எல்லோருடைய நினைப்பும், காவல்துறை நடவடிக்கை சரியாக உள்ளது. இருந்தாலும் நாம் பாதிக்கப்பட்ட பெண் பக்கத்தில் தான் நிற்க வேண்டும் என நினைக்கிறேன். பெண்களுக்கு தைரியம் வேண்டும். இது போன்ற சம்பவம் நடக்க கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக