இராமநாதபுரம் தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் சேதம்.போக்குவரத்து தாமதம்
பாண்டிச்சேரி முதல் தூத்துக்குடி வரையில் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது.இந்த சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றி அதற்காக நிலம் கையகப்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை இராமநாதபுரம் கீழக்கரை,ஏர்வாடி,சிக்கல்,சாயல்குடி, நரிப்பையூர்,கன்னிராஜபுரம்,சூரங்குடி,வேம்பார்.குளத்தூர்,ஆகிய ஊர்களில் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளதால் இந்த சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் சேதம் ஏற்படுவதோடும், ஐயப்ப பக்தர்கள் சுற்றுலா செல்லும் வாகனங்கள் அதிகளவில் செல்கின்ன, ஆறு வழி சாலை போடுவதற்கான வேலைகள் நடைபெற்றலூம்.
தற்போது சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க கோருகின்றனர்,
மேலும் இப்பகுதியில் முன் எச்சரிக்கை பதகை இல்லாமல் வேக தடைகள் அதிகளவில் உள்ளதால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.
பலமுறை முறையிட்டும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை என்று அப்பகுதியில் மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக