ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஈரோட கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி கடந்த 26-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 26 ஆம் தேதி அன்று 40
ஆயிரத்து 429 வாக்காளர்களுக்கும்,
27-ம் தேதி அன்று 34 ஆயிரத்து 859
வாக்காளர்களுக்கும், 28 ஆம் தேதி
32 ஆயிரத்து 79 வாக்காளர்களுக்கும்,
29-ந் தேதி 37 ஆயிரத்து 146
வாக்காளர்களுக்கும், நேற்று 31
ஆயிரத்து 539 வாக்காளர்களுக்கும் பூத்
சிலிப் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம்
இதுவரை 1 லட்சத்து 76 ஆயிரத்து
052 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்
விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள வாக்காளர்களுக்கு
இன்று கொடுத்து முடிக்கப்படும் என
அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக