அனைவரின் பாராட்டுகளை பெற்ற மேக்சிகேப் வாகன ஓட்டுனர் சங்கத்தின் இலவச வாகன சேவை!!!!!
நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மீகதலமும் சுற்றுலா பயணிகளை கவரும் உன்னத இயற்கை அழகுடன் காணப்படும் மான் குன்றம் என அழைக்கபடும் உதகை எல்கில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் தை பூசத்திருவிழா நேற்று வெகு கோலகலமாக கொண்டாடப்படடது. ஆயிரக்கதக்கான பக்தர்கள் குவியும் இந்த தை பூசத்திருவிழாவை முன்னிட்டு மேக்சிகேப் வாகன ஓட்டுனர் சங்கத்தின் இலவச வாகன சேவை நடைபெற்றது.
மலைமீது ஏறமுடியாமல் சிரமபட்ட ஆன்மீக அன்பர்கள் வயதானவர்கள் குழந்தைகளுக்கு இந்த இலவச வாகன சேவை பெரும் உதவியாக இருந்ததாக அனைத்து தரப்பினரும் பெரும் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத் குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக